அமெரிக்காவில் முஸ்லீம்களிற்கு எதிரான வன்முறை சம்பவமொன்றில் ஆறு வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜோசப் யூபா என்ற 71 வயது நபர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஆறுவயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான் 32 வயது பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
இலினொய்ஸ் பிளெய்ன்பீல்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹமாஸ் இஸ்ரேலிற்கு இடையிலான மோதல் காரணமாகவே இந்த குற்றம் இடம்பெற்றுள்ளது சந்தேக நபருக்கு எதிராக கொலை மற்றும் வெறுப்புணர்வு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் தாக்குகின்றார் என அந்த பெண்மணி அவசர அழைப்பினை மேற்கொண்டார் நான் அவரை தாக்கி என்னை காப்பாற்ற முயல்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் அங்கு சென்றவேளை அந்த பெண்ணும் சிறுவனும் கடும் காயங்களுடன் காணப்பட்டனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.