Our Feeds


Monday, October 30, 2023

Anonymous

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் | பொதுமக்களின் பாதுகாப்பே முதன்மையானது - ஐ.நா பொதுச் செயலாளர் அறிவிப்பு

 



மனிதாபிமான தேவைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என போர் விதிகள் கூறுவதாக ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.


நேபாளத்தில் ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 


முன்னதாக தனது 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல் - ஹமாஸ் போராளிகள் இடையிலான போரில் கொல்லப்பட்ட 10 நேபாள மாணவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்வதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.


மேலும், 'பொதுமக்களின் பாதுகாப்பு என்பது முதன்மையானது. மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்றும், மனிதாபிமான தேவைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் போர் விதிகள் கூறுகின்றன. அந்த விதிகளை யாருக்காகவும் மாற்ற முடியாது' என பதிவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »