Our Feeds


Saturday, October 28, 2023

News Editor

மின் கட்டணத்தில் மாற்றம் இன்றேல் வெதுப்பக பொருட்களின் விலைகள் உயரும்


 மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் இன்றேல் , வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவிக்கையில்,


மின் கட்டண அதிகரிப்பால் தமது தொழிற்துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


மின் கட்டணம் 400 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனுடன் 36 சதவீத வருமான வரியும் 15 சதவீத வற் வரியும் செலுத்தப்பட வேண்டும். வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை மேலும் அதிகரித்தால் நுகர்வோர் கொள்வனவு குறைவடையும்.இதனால் தமது தொழிற்துறை மேலும் சிக்கலை எதிர்நோக்கும் என தெரிவித்துள்ளார்.


வெதுப்பக உற்பத்திகளின் விலையினை தற்போதைய மட்டத்தில் தொடர்ந்தும் பேணுவதானால் அரசாங்கத்தின் மின் கட்டண உயர்வு மற்றும் வரிக்கொள்கை தீர்மானங்கள் மீள் பரிசீலனை செய்யப்பட்டு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »