Our Feeds


Friday, October 6, 2023

Anonymous

முறிந்து விழும் அபாயத்தில் உள்ள பாரிய மரங்கள் - உடனடி நடவடிக்கை எடுக்க - பிரமித பண்டார அதிரடி உத்தரவு.

 



நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் வீதியின் இருபுறமும் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள பாரிய மரங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

சுற்றாடல் அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.


 

இன்று (06) காலை கொள்ளுப்பிட்டியில் பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »