2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் நடைபெறும் திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எதிர்வரும் சில தினங்களில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து பரீட்சைகள் பிற்போடப்பட்டதாக அமைச்சர் அப்போது தெரிவித்தார்.
எனினும் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இன்று குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.