கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூருக்கு இடையே வாராந்த விமான சேவைகளின் எண்ணிக்கையை ஸ்ரீலங்கன் விமான சேவை நான்காக அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்று முதல் வாராந்தம் செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் குறித்த விமான சேவை முன்னெடுக்கப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் லாகூர் செல்ல வாரத்துக்கு 900 பயணிகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.