Our Feeds


Friday, October 13, 2023

Anonymous

கண் நோய் பரவும் அபாயம் - சிறுவர்கள் தொடர்பில் மருத்துவரின் எச்சரிக்கை!

 



சுவாசக்குழாய் தொற்று உள்ள சிறு குழந்தைகளுக்கு கண் நோய் பரவும் அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் கண் நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹிரண்ய அபேசேகர தெரிவித்துள்ளார்.


கடந்த வாரத்தில் கொழும்பு பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் குழந்தைகளுக்கு கண் நோய் பரவியது. உலக பார்வை தினத்தை முன்னிட்டு நேற்று (12) கண் வைத்தியசாலையில் நடைபெற்ற மாநாட்டில் வைத்தியரிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொதுவாக சிறு குழந்தைகளுக்கு சுவாசக்குழாய் தொற்று காரணமாக கண் நோய்கள் பரவுவதாகவும், மூன்று நாட்களுக்கு மேல் இந்நோய் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

மேலும், கண்கள் சிவப்பாக இருந்தால், கண்களில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகமாக இருந்தால், பெற்றோர்கள் கவனம் செலுத்தி, குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாமல், வீட்டிலேயே தங்க வைத்து, மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் வைத்தியர் கூறினார்.

பாடசாலையொன்றில் இவ்வாறான அறிகுறிகளுடன் கூடிய குழந்தை இருந்தால் உடனடியாக நோயுற்ற பிள்ளையை ஏனைய குழந்தைகளிடமிருந்து பிரித்து பார்ப்பது மிகவும் அவசியமானது என விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹிரண்ய அபேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கண் நோய் குறித்து பெற்றோர்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »