Our Feeds


Thursday, October 19, 2023

SHAHNI RAMEES

மீரியபெத்த மக்களை உடன் வெளியேறுமாறு அறிவிப்பு – மீறினால் கைது

  



கொஸ்லந்த மீரியபெத்த பகுதியிலிருந்து 16 குடும்பங்களை

உடன் வெளியேறுமாறு பண்டாரவளை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


 


கொஸ்லந்த மீரியபெத்த பழைய மண்சரிவுப் பகுதியின் இருபுறமும் உள்ள அதிக ஆபத்துள்ள வலயத்திலிருந்து 16 குடும்பங்களை வெளியேற்றி அதன் முன்னேற்றத்தை இன்று வியாழக்கிழமை (19) நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு பண்டாரவளை பதில் நீதவான் கென்னத் டி சில்வா, நேற்று புதன்கிழமை (18) உத்தரவிட்டார்.


 


கொஸ்லந்த பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.தினேஷ் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் (69335) புவனேஸ்வரன் நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவித்தார்.


 


உண்மைகளை பரிசீலித்த பதில் நீதவான் கென்னத் டி சில்வா, பாதுகாப்பற்ற நிலையில் வசிக்கும் 16 குடும்பங்களை உடனடியாக அகற்றி, நாளை நீதிமன்றத்தில் உண்மைகளை தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.


 


இது தொடர்பில் ஒலிபெருக்கி மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், அவ்வாறு செல்லாவிட்டால் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் எனவும் கொஸ்லந்த பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »