Our Feeds


Monday, October 2, 2023

News Editor

பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது


 எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (02) காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுவதைப் போன்று மாதாந்தம் பேரூந்து கட்டண திருத்தமும் மேற்கொள்ளப்படும் வகையில் தேசிய பேரூந்து கட்டண திருத்தக் கொள்கையை திருத்துமாறு கோரவுள்ளதாக அவர் இங்கு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »