மொரட்டுவை பொல்கொட ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் சுமார் 5 அடி உயரம் உடையதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதவான் விசாரணைகளை அடுத்து, சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.