ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக இன்று சபாநாயகர் முன்னிலையில் பதிவிப் பிரமானம் செய்துகொண்டார் அலி சாஹிர் மௌலானா.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று கட்சி முடிவை மீறி பஜ்ஜட்டுக்கு ஆதரவளித்த காரணத்தினால் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், எம்.பி யுமான ஹாபிஸ் நசீர் அஹ்மத் மீது மு.க மேற்கொண்ட நடவடிக்கை சரியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததின் மூலம் நஸீர் அஹ்மத் இழந்த பதவி வெற்றிடமானது.
இந்நிலையில், ஹாபிஸ் நசீர் அஹ்மதுக்கு அடுத்த இடத்தில் இருந்த அலி சாஹிர் மௌலானா மு.க சார்பில் எம்.பி யாக பதவியேற்றுக் கொண்டார்.