Our Feeds


Sunday, October 15, 2023

Anonymous

இஸ்ரேல் தாக்குதல் - வெளிநாட்டவர் காஸாவிலிருந்து வெளியேற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

 



இஸ்ரேல் காஸா முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காஸாவில் உள்ள வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக எகிப்து வழியாக வெளியேறுவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து இடையே ஏற்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் நேரத்தில் தாக்குதலைத் தவிர்க்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஒப்பந்தத்தை பலஸ்தீன ஆயுதக் குழுக்களும், ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளும் அங்கீகரித்திருப்பதாக இதற்கான முயற்சியை மேற்கொண்ட கட்டார் தெரிவித்துள்ளது.

காஸாவில் இருந்து ரபா முனை வழியாக வெளிநாட்டவர்கள் எகிப்துக்குள் செல்வதற்கு எகிப்தும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »