Our Feeds


Wednesday, October 18, 2023

Anonymous

கந்தளாய் - சூரிய வெவ வான் கதவு உடைந்ததால் பல வீடுகள், வீதிகள் நீரில் மூழ்கின !

 



சீரற்ற காலநிலையால் கந்தளாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சூரியபுர பகுதியிலுள்ள சூரிய ஏரியில் இருந்து காந்தி ஏரிக்கு நீர்வழங்கும் வான் கதவு உடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இதனால் குறித்த பிரதேசத்தில் உள்ள பல வீடுகள் மற்றும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

அதனையடுத்து, ஏரியிலிருந்து பாயும் நீரை கட்டுப்படுத்தவும், வீடுகளிலும் வீதிகளிலும் வெள்ள நீர் தேங்குவதை தடுக்கவும் பாதுகாப்பு படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து மணல் மூடைகளை அடுக்கி வருகின்றனர். 

இந்நிலையில், கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் இது குறித்து கூறுகையில், 

வான் கதவு பொருத்தப்பட்டிருக்கும் இடத்தில் காட்டு யானைகள் வழமையாக நடமாடுவதாலும் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாகவும் இந்த வான் கதவு உடைந்திருக்கக்கூடும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »