Our Feeds


Sunday, October 1, 2023

Anonymous

சிவனொளிபாத மலைக்குச் செல்ல காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு.

 



பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் அனுமதியின்றி சிவனொளிபாத மலைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட  அறிவித்துள்ளார்.


நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று  சனிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 

பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் அனுமதியின்றி சிவனொளிபாத மலைக்கு சென்று வழிபடலாம் என அண்மைய நாட்களில் வெளியான செய்திகள் உண்மையல்ல.

2022 - 2023ஆம் ஆண்டு சிவனொளிபாத மலை பருவகாலம் நிறைவடைந்துள்ள நிலையில், சப்ரகமுவ மாகாண பிரதம சங்கநாயக பெங்கமுவே தம்மதின்னவின் பணிப்புரைக்கமைய, அனுமதியின்றி ஹட்டன் வீதி மற்றும் இரத்தினபுரி வீதி ஊடாகவும் சிவனொளிபாத மலைக்கு செல்வதற்கு முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

சிவனொளிபாத மலைக்கு பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் வரும்போது உரிய நிறுவனங்களின் அனுமதியை பெற்று, நல்லதண்ணி மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்க வேண்டும். 

சிவனொளிபாதமலை பகுதியில் இடையிடையே பலத்த மழை பெய்து வருவதாலும், அங்கு செல்லும் படிகளில் பாரிய நீரோடை ஓடுவதாலும் சிவனொளிபாத மலைக்கு செல்வது ஆபத்தானது என எச்சரித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »