இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் பலஸ்தீன மக்களுடன் ஐக்கியமாக நிற்கும் முகமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.
பலஸ்தீன தூதுவருடனான கலந்துரையாடலின் போது, உலகில் எங்கும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்றும், போர் தீர்வு அல்ல என்றும் கூறினார்.
போரில் இலங்கையின் அனுபவங்களை குறிப்பிட்ட அவர், சமாதானத்தின் அவசரத்தை வலியுறுத்தினார், இது இரு நாடுகளிலும் உள்ள பொதுமக்களுக்கு செழிப்புக்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளது.
"பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் என்ற முறையில் நான் பலஸ்தீன நோக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறேன்," என்று அவர் கூறினார்.
"யுத்தம் ஒரு தீர்வாகாது," என்று முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறினார்.