இஸ்ரேல் காசாவிற்கான எரிபொருள் மின்சார மற்றும் பொருட்கள் விநியோகத்தை துண்டிக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அறிவித்துள்ளார்.
இஸ்ரேலிய அதிகாரிகள் ஏற்கனவே மின்விநியோகத்தை துண்டித்துள்தால் காசா இருளில் மூழ்கியுள்ளது.
2007 முதல் பாதுகாப்பு காரணங்களிற்காக இஸ்ரேலும் எகிப்தும் காசா மீது தடைகளை விதித்துள்ளன.
இஸ்ரேல் காசாவின் வான்வெளிப்பாதையை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. மேலும் எல்லை ஊடாக எவ்வாறான பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் தீர்மானிக்கின்றது.