இஸ்ரேல் மீதான பாலஸ்தீனம் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தனது X வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளதாவது,
"இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த கடினமான நேரங்களில், இஸ்ரேல் மக்களின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் இந்தியா துணை நிற்கும். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இருக்கும்" என்று பதிவிட்டு இஸ்ரேலுக்கான ஆதரவை தெரிவித்தார்.