Our Feeds


Sunday, October 15, 2023

Anonymous

பெண் மீது கடும் தாக்குதல் நடத்திய, கணவன், மனைவி அதிரடி கைது.

 



தனியார் நிறுவனம் ஒன்றில் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவியதனையடுத்து, 36 வயதுடைய தம்பதியினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இச் சம்பவம் இம்மாதம் 3ஆம் திகதி கந்தானை நாகொட அணியகந்த வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி நேற்று இரவு நாகொட லிப்டன் வீதியில் வைத்து கந்தானை பொலிஸாரால் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தாக்கப்பட்ட பெண்ணின் நெருங்கிய உறவினர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக அடிப்படையில் கைது செய்யப்பட்ட கணவனும் மனைவியும் அணியகந்த பிரதேசத்தில் ஒன்லைன் மூலம் பொருட்களை வர்த்தகம் செய்யும் தொழிலை நடத்தி வந்துள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளான பெண் சுமார் 3 வருடங்களாக இந்த உறவினர் வீட்டில் தங்கி அவர்களின் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய தம்பதிகள் உறவினர்கள் என்ற காரணத்தினால் தாக்குதலுக்கு உள்ளான பெண் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை.

இருப்பினும், இந்த சம்பவத்தின் காணொளி காட்சிகள் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பரவியதை அடுத்து, அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »