Our Feeds


Friday, October 6, 2023

Anonymous

நில்வல கங்கையின் தாழ்வான பகுதிகளுக்கு அதிஉயர் வெள்ள அபாய எச்சரிக்கை!

 



நில்வலா கங்கையில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகிய நிலையில், பாரிய வௌ்ளம் ஏற்படுவதற்கான அபாயம் நிலவவுதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மாத்தறை, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய, திஹகொட, அத்துரலிய மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

எனவே, வௌ்ளத்தினால் ஏற்படும் அபாயங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சாரதிகள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »