இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து விரிவாக பேசப்பட்டன.
இதன்போது பேசிய மெரிக்க தூதுவர் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
அத்தோடு நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்து சில முக்கிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜனநாயகத்தில் பலதரப்பட்ட கண்ணோட்டங்களைக் கேட்பது மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஈடுபடுவது முக்கியம் என்றும் இதன்போது அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.