கோடீஸ்வர வர்த்தகரான லலித் கொத்தலாவலயின் மரணத்துக்கு சளி மற்றும் நிமோனியா அதிகரித்தமையே காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்க்ஷ உள்ளிட்ட மூவர் அடங்கிய சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவினர் நேற்று திங்கட்கிழமை (23) நடத்திய பிரேத பரிசோதனையின்போது இது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லலித் கொத்தலாவலயின் மரணம் சந்தேகத்துக்குரியது என குடும்ப உறவினர் ஒருவர் பம்பலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், நீதிமன்றத்தில் பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்ததால் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்று நிபுணர்கள் அடங்கிய தடயவியல் அதிகாரிகள் குழு மூலம் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.