அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில்தான் போட்டி காணப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஐக்கிய மக்கள் சக்திக்குதான் மக்கள் மத்தியில் சிறந்த கேள்வி உள்ளது, அடுத்த இடத்தில் ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) இருக்கின்றது, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன பட்டியலில் இல்லை, ஆக இரு முனைபோட்டிதான் காணப்படும்.
அதேவேளை, சுகாதார அமைச்சை மீள கட்டியெழுப்ப முடியும். சிறந்த அரசியல் வேலைத்திட்டமொன்று இருந்தால் சுகாதார அமைச்சை மட்டுமல்ல எல்லா துறைகளையும் கட்டியெழுப்பலாம்.” – என்றார்.