Our Feeds


Wednesday, October 4, 2023

News Editor

இலங்கை கிரிக்கெட் நிறுவன விவகாரங்களை கையாளும் குழு செயற்படுவதற்கு தடை!


 இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு சிதத் வெத்தமுனி தலைமையிலான குழுவொன்றை நியமித்து விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சங்கம் சமர்ப்பித்த ரிட் மனுவை பரிசீலித்த நீதிபதிகள் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »