Our Feeds


Monday, October 9, 2023

Anonymous

பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் மேலும் நீடிக்கப்படும் சாத்தியம்!

 



தற்போதைய பொலிஸ் மா  அதிபர் சி.டி விக்கிரமரத்னவின்  பதவிக் காலம் மேலும் நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.


பொலிஸ் மா  அதிபர்  விக்கிரமரத்ன பொலிஸ் சேவையில் இருந்து 2023 மார்ச் 26 இல் ஓய்வு பெறுவார் என முதலில் கூறப்பட்டிருந்த போதிலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏப்ரல்  6 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அவரது பதவிக்காலத்தை ஜூன் 26 ஆம் திகதி வரை மூன்று மாதங்களுக்கு நீடித்தார்.

பின்னர் ஜூலை 9 ஆம் திகதி அவருக்கு  மேலும் 3 மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பதா அல்லது தற்போதைய பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவுக்கு  மீண்டும் சேவை நீடிப்பு வழங்குவதா என்பது தொடர்பில் இன்று திங்கட்கிழமை  (09)  இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »