Our Feeds


Thursday, October 12, 2023

News Editor

இங்கிலாந்து விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து


 இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் மாகாணத்தின் முக்கிய நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


நேற்றிரவு குறித்த பகுதியில் கார் நிறுத்தப்பட்டிருந்த கட்டிடத்தின் 3-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் கட்டிடம் முழுவதும் தீ பரவியுள்ளது.


தீயணைப்பு படையினர் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் குறித்த பகுதிக்கு விரைந்தனர். பொலிஸாரின் உதவியுடன் தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.


இந்த விபத்தில் 1500-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளன. 


குறித்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »