அரசாங்க இரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் இம்ரான்கானை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் முகமது குரேஷி ஆகியோர் மீது அரசு இரகசியங்களை வெளிப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டது.
சைபர் வழக்கு என அறியப்படும் இந்த வழக்கு விசாரணை பாகிஸ்தானின் சிறப்பு நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் இருவரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.