Our Feeds


Saturday, October 14, 2023

News Editor

கிங் கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கம்


 கிங் கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.


கடந்த 24 மணித்தியாலங்களில் கணிசமான அளவு மழை பெய்யாததால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


எனவே, கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி முதல் கிங் கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது.


நில்வலா ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »