இன்று வெள்ளிக்கிழமை பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் போராட்டங்களை நடத்துமாறு ஹமாஸின் முன்னாள் தலைவர் காலித் மிஷ்அல் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹமாஸின் முன்னாள் தலைவர் மிஷ்அல், தற்போது கத்தாரில் செயல்பட்டு வருகிறார், ஹமாஸின் வெளிநாட்டு புலம்பெயர் அலுவலகத்திற்கு தலைமை தாங்குகிறார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மீண்டும் போர் தொடங்கி 7 நாட்களாகியும், இரு தரப்பிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது காஸா பகுதியில் கடும் குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு நிலவி வருவதுடன், மின்சாரமும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.