Our Feeds


Sunday, October 8, 2023

Anonymous

காசாவிலிருந்து மக்களை தப்பியோடுமாறு இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு!

 



காசா மீதான பழிவாங்கும் தாக்குதலிற்கு முன்னதாக அங்கிருந்து மக்களை தப்பியோடுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் காசா பள்ளத்தாக்கின் மீது தொடர்ச்சியான விமான தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது.


இதுவரை 230 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 1000 பேர் வரை காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முற்றுகைக்குள்ளாகியுள்ள காசா பள்ளதாக்கின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நகரத்தின் மத்திக்கு சென்று தற்காலிக தங்குமிடங்களில் தங்குமாறு இஸ்ரேலிய இராணுவம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளதுபல குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி ஐநாவின் தற்காலிக தங்குமிடங்களிற்கு செல்கின்றன.

இஸ்ரேல் தொடர்ச்சியான பாரிய விமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »