இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் நாளைய தினம் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த 4 வருடங்களுக்கும் அதிக காலம் மின்சார சபை ஊழியர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்படவில்லை என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.