Our Feeds


Monday, October 2, 2023

News Editor

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து இன்று விசேட கலந்துரையாடல்


 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பல கால அட்டவணைகளில் தாமதம் ஏற்படுவது தொடர்பில் ஆராய்வதற்காக இன்று (02) விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று காலை 9.30 மணிக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமான தாமதங்கள், நாட்டின் தேசிய விமானப் பிராண்டிற்கு களங்கம் ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களில் பல ஸ்ரீலங்கன் விமானங்கள் இரத்து செய்யப்பட்டன மற்றும் சில விமான அட்டவணைகளில் தாமதங்கள் தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »