Our Feeds


Monday, October 2, 2023

SHAHNI RAMEES

பொலிஸ் கான்ஸ்டபிளின் கையை கடித்துவிட்டு தப்பியோடிய அம்பியூலன்ஸ் சாரதி

 

மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கையை கடித்து விட்டு தப்பிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி சாரதியை கைது செய்ய நடவிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

குறித்த சாரதி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக மன்னார் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

 

இதனையடுத்து முருங்கன் வைத்தியசாலை பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரைக் கைது செய்ய முற்பட்டபோதே அவர் இவ்வாறு பொலிஸ் கான்ஸ்டபிளின் கையைக் கடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

 

இந்நிலையில், காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முருங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »