Our Feeds


Thursday, October 26, 2023

SHAHNI RAMEES

மாணவர்களை ஏற்றிச் செல்லும் பழுதடைந்த பஸ்கள், வேன்கள் மீது கடும் நடவடிக்கை...!

 

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பழுதடைந்த பஸ்கள் மற்றும் வேன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  பொலிஸார் தெரிவித்தனர்.

போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்.மனோஜ் ரணகல நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயணிகள்  போக்குவரத்தில் இருந்து நீக்கப்பட்ட பல பஸ்கள் மற்றும் வேன்கள்   பாடாசாலை சேவையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »