Our Feeds


Thursday, October 26, 2023

News Editor

கடன் மறுசீரமைப்பில் வெளிப்படைத்தன்மை அவசியம்


 கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் பங்கேற்கும் சகல தரப்பினரும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி ஆளுநரை நேற்று (25) முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடன் வழங்குநர்கள் அனைவரும் சமமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க தூதுவர் மத்திய வங்கி ஆளுநரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனூடாக,  கடன் மறுசீரமைப்பு செயன்முறையை நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »