அல்லாஹ்வை கடுமையாக நிந்தித்து, திட்டி அசிங்கமாக பேசி முகநூலில் வீடியோ வெளியிட்ட கண்டியை சேர்ந்த நபருக்கு எதிராக இன்று CCID யில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முஸ்லிம்களின் ஏக இறைவனான அல்லாஹ்வை சகட்டு மேனிக்கு விமர்சித்து கேவலமாக பேசிய நபரை கைது செய்யுமாறு இன்றைய தினம் கொழும்பு, கணிணி குற்றங்கள் பற்றிய விசாரணைப் பிரிவில் உலமாக்கள் மேற்கொண்ட உடனடி முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளர்கள் முறைப்பாடு செய்தவுடனேயே கொழும்பிலிருந்து கண்டிக்கு அனுப்பப்பட்ட CCID அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.