Our Feeds


Sunday, October 1, 2023

Anonymous

துருக்கி பாராளுமன்றத்திற்கு அருகில் குண்டுத் தாக்குதல் - நடந்தது என்ன?

 



துருக்கி பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள பாராளுமன்ற வளாகம் மற்றும் துருக்கி உள்துறை அமைச்சுக்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.

பாராளுமன்றத்திற்கு அருகில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்றே நடாத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »