Our Feeds


Monday, October 9, 2023

Anonymous

மரணத்தில் முடிந்த டிக்டொக் மோகம் - மட்டக்களப்பு – நாவலடியில் சோகம்!

 



டிக்டொக் வீடியோ எடுப்பதற்காக நேற்று (8) படகில் சென்ற 6 மாணவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மட்டக்களப்பு – நாவலடி குளத்திற்கு சென்ற 6 மாணவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதிலேயே இந்த இரு மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.


குறித்த மாணவர்கள் பயணித்த படகு கரை திரும்பும் போது கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த 6 மாணவர்களில் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விபத்தில் மட்டக்களப்பு சீலாமன் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 18 வயதுடைய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »