Our Feeds


Wednesday, October 18, 2023

Anonymous

உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தம் | சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவிப்பு.

 



உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் சில திருத்தங்களை நாடாளுமன்றத்தில் குழுநிலையில் அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று புதன்கிழமை (18)  உயர்  நீதிமன்றத்துக்கு  அறிவித்துள்ளார்.


நிகழ்நிலை  பாதுகாப்பு சட்டமூலத்தை   சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட  மனுக்கள்  உச்ச நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன மேற்கண்டவாறு  இதனை நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »