Our Feeds


Sunday, October 29, 2023

Anonymous

சம்பந்தன் பற்றிய சுமந்திரனின் கருத்து | விரைவில் நேரில் சந்தித்து முடிவை அறிவிப்பேன் - மாவை அறிவிப்பு

 



ஆர்.ராம்


இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும், அக்கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜாவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

இந்த உரையாடலின்போது, தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், முதுமை நிலை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென பகிரங்கமாகத் தெரிவித்த கருத்து தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த தொலைபேசி உரையாடல் பற்றி மாவை. சேனாதிராஜா தெரிவிக்கையில், சம்பந்தன் தொலைபேசி மூலமாக என்னுடன் உரையாடினார். அதன்போது சுமந்திரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் கருத்துக்களை பரிமாற்றியிருந்தார். 

எனினும், தன்னை விரைவில் நேரில் வந்து சந்திக்குமாறு கோரியுள்ளார். அதற்கமைவாக அவருடன் விரிவானதொரு கலந்துரையாடலை நடத்தவுள்ளேன். அதன் பின்னரேயே குறித்த விடயம் சம்பந்தமாக உத்தியோகபூர்வமான அறிவிப்பை விடுக்கவுள்ளேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »