Our Feeds


Saturday, October 21, 2023

Anonymous

வக்பு சர்சையில் சிக்கியுள்ள கபூரிய்யா அரபுக் கல்லூரி வழியாக A/L எழுதிய மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியில் பிரச்சினை!

 



(ஏ.ஆர்.ஏ. பரீல்)


மஹ­ர­கம கபூ­ரியா அரபுக் கல்­லூரி ஊடாக க.பொ.த. (உ/த) பரீட்­சைக்குத் தோற்­றிய மாண­வர்­க­ளுக்கு கல்­லூரி நிர்­வாகம் இது­வரை விடுகைச் சான்­றிதழ் (Leaving Certificate) வழங்­கா­மையால் குறிப்­பிட்ட பரீட்­சையில் சித்­தி­ய­டைந்து பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்குத் தகுதி பெற்­றுள்ள மாண­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்ளனர்.


பரீட்சை வெட்டுப் புள்­ளி­களின் அடிப்­ப­டையில் பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்கு தெரி­வான மாண­வர்கள் பாட­சா­லையின் விடுகைச் சான்­றி­தழைச் சமர்ப்­பிப்­பது கட்­டா­ய­மாகும். பரீட்சை பெறு­பே­று­களின் அடிப்­ப­டையில் 8 மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைப் பெற­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

கல்­லூரி நிர்­வாகம் தமக்கு விடுகைச் சான்­றிதழ் வழங்­காமை தொடர்பில் அவர்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு முறைப்­பாடு செய்­தி­ருந்­தனர். இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் கபூ­ரியா அரபுக் கல்­லூ­ரியின் செய­லா­ள­ருக்கு கடி­த­மொன்று அனுப்பி வைத்­துள்ளார்.


கபூ­ரியா அரபுக் கல்­லூரி மாண­வர்கள் கல்­லூ­ரி­யி­லி­ருந்து விடுகைச் சான்­றிதழ் பெற்றுக் கொள்­வ­தற்கு திணைக்­க­ளத்தின் ஒத்­து­ழைப்பைக் கோரி­யுள்­ளார்கள். அவர்கள் தங்­க­ளது உயர் கல்­வியைத் தொடர்­வ­தற்கு இந்தச் சான்­றிதழ் அவ­சி­ய­மாகும். எனவே, உரிய சான்­றி­தழை வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்­யுங்கள் என கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


திணைக்­களப் பணிப்­பா­ள­ரினால் கடந்த 4ஆம் திகதி கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்டும் இது­வரை அதற்­கு­ரிய நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என மாண­வர்கள் தெரிவிக்கின்றனர்.- Vidivelli

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »