4 வருடங்களுக்கு முன்னர் கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 80 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன், இலங்கை கைச்சாத்திட்ட சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம், குறித்த சிறைத்தண்டனையை அனுபவிக்கும் வகையில் பிரதிவாதிகளை ஈரானுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.