Our Feeds


Sunday, October 1, 2023

Anonymous

8 மாவட்டங்களின் 30 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு எச்சரிக்கை!

 



மழையுடனான காலநிலை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள 30 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (1) காலை தெரிவித்துள்ளது.


இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் இம்புல்பே, கொலொன்ன, அயகம, பெல்மடுல்ல, குருவிட்ட, கல்வான, எஹெலியகொட, கிரியெல்ல, இரத்தினபுரி, எலபட மற்றும் நிவித்திகல, மாத்தறை மாவட்டத்தில் முலட்டியன, அதுரலிய, கொட்டபொல மற்றும் பிடபெத்தர, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, கேகாலை,. பஸ்பாகே கோராலய, களுத்துறை மாவட்டத்தின் பரல்லாவிட்ட, மத்துகம, புலத்சிங்கள அகலவத்தை, புகத்சிங்க மற்றும் இங்கிரிய, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கரஸ்முல்ல மற்றும் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நெலுவ மற்றும் மாத்தளை மாவட்டத்தின் பிராந்திய செயலகப் பிரிவுகளுக்கு குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »