சீரற்ற வானிலையால் நாட்டின் பல மாவட்டங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18,898 குடும்பங்களைச் சேர்ந்த 71,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் பதினாறு மாத்தறை பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.