Our Feeds


Tuesday, October 3, 2023

News Editor

’’70% பணியாளர்கள் திறமையற்றவர்கள்”




 ”தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் சேவையில் இணைந்துள்ளனர். அவர்களில் சுமார் 70% பணியாளர்கள் திறமையற்றவர்கள்” என  அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பல பிரிவுகளில் பணி வெற்றிடம் காணப்படுவதாகவும் , சில பிரிவுகளில் பணியாளர்கள் வெறுமனே  சோம்பேறித்தனமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், புதிய ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் எண்ணம் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »