கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ராகம பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கு நேற்று பிறந்த ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று (18) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 400 கிராம் எடை கொண்ட அந்த குழந்தைக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையலேயே குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.