பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நான்கு அதிகாரிகள் மண்சரிவில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளே இவ்வாறு மண்சரிவில் சிக்கி காயமடைந்துள்ளனர்.
பின்னதுவ மற்றும் இமதுவைக்கு இடைப்பட்ட 102 ஆவது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகாமையில் வீதியின் இருபுறமும் உள்ள மலைகளே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
மேலும், அந்த மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.