17-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், காசாவில் 320 இடங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் சுமார் 420 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அல்-ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, காசா நகருக்குள் செல்லும் நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனங்களை இஸ்ரேல் படைகள் பரிசோதனை செய்து அனுப்பி வருகின்றன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே போர் தீவிரமடைய கூடும் என்ற நிலையில், இலட்சக்கணக்கான இஸ்ரேல் மக்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர்.