Our Feeds


Saturday, October 28, 2023

SHAHNI RAMEES

எகிப்தில் கோர விபத்து - 32 பேர் உயிரிழப்பு

 

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ மற்றும் மத்திய தரைக்கடல் நகரான அலெக்சாண்டிரியாவை இணைக்கும் நெடுஞ்சாலை ஒன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த நெடுஞ்சாலையில், இன்று திடீரென கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இதில் பயணிகள் பஸ் ஒன்று மற்றும் பிற வாகனங்களும் சிக்கி கொண்டன.



சில வாகனங்களில் தீப்பற்றி கொண்டது. இந்த சம்பவத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதோடு, 63 பேர் காயமடைந்தனர். 



இந்நிலையில் தகவல் அறிந்ததும், அம்புயூலன்சுகள் உடனடியாக சென்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »