உணவு ஒவ்வாமை காரணமாக பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக குறித்த மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து, பாடசாலை மாணவர்களுக்காக குறித்த உணவு வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.