வடகிழக்கு மியன்மாரில் லைசா (Laiza) நகருக்கு வெளியே உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கான மோங் லாய் கெட் (Mong Lai Khet) முகாமில் வெடி குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 56 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 44 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.